search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான்"

    பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச கேஸ் இணைப்புகளின் எண்ணிக்கை இன்று 5 கோடியை தொட்டுள்ளது. #PMUjjwalaYojana #FiveCroreGasConnection
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா பகுதியில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு ரூ.8,000 கோடி மதிப்பீட்டிலான இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா 1.5.2016 அன்று நடைபெற்றது.

    இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, 5 கோடி ஏழைகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கும் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் சார்பில் வழங்கப்பட்ட கேஸ் இணைப்புகளின் எண்ணிக்கை 5 கோடியை தொட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் இலக்கான 5 கோடி இணைப்புகள் என்னும் குறியீட்டை எட்டிய வகையில், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கலந்து கொண்டு ஐந்து கோடியாவது கேஸ் இணைப்பை பயனாளிக்கு வழங்கினார். இதில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். #PMUjjwalaYojana #FiveCroreGasConnection
    ×